வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!!

1739

போராட்டம்..

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தினரினால் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக இன்று (14.03.2022) மதியம் 12.30 மணி தொடக்கம் 12.50 மணி வரை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வவுனியா மாவட்ட செயலக பிரிவில் பணியாற்றும் 20க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பட்டதாரிகளுக்கு உடன் பதவி உயர்வை வழங்கு , நீக்கப்பட்ட விசேட அலுவலக செயற்றிறன் முறையை திருப்பக் கொடு , பயணச் செலவு கொடுப்பனவு உட்பட அனைத்து கொடுப்பணவுகளையும் உயர்த்துங்கள்,

1999,2005,2008 பட்டதாரிகளுக்கு உடன் பதவி உயர்வுகளை வழங்கு , 2016 ஆம் ஆண்டு இழந்து போன முழு ஒய்வூதியக் காப்புரிமையை திரும்பக்கொடு போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.