அரவிந்தன் அபிரான்..

2021 ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. பெறுபேறுகளின் அடிப்படையில்,

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவன் அரவிந்தன் அபிரான் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இவர் வைத்தியர் அரவிந்தன் மற்றும் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி ஆசிரியை ஜனந்தினி ஆகியோரின் புதல்வனாவார். மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற அபிரானுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.




