இரு பேருந்துகள் மோதி விபத்து : அறுவர் படுகாயம்!!

1301

விபத்து..

நமுனுகுல – பசறை பிரதான வீதியின் பத்தாம் கட்டைப் பகுதியில் இரு பேருந்துகள் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன. விபத்தில் பேருந்து சாரதி உட்பட அறுவர் காயங்களுடன் பசறை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. பண்டாரவளையிலிருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்தும்,

பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பாடசாலை சேவை பேருந்தும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.