கிளிநொச்சி – பூனகரி பிரதேசத்தில் இரண்டு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது குறித்த பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கம் என்று கூறி போலி நகைகளை சீன பிரஜைகள் விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.