வவுனியா செட்டிகுளம் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து : மயிரிழையில் தப்பிய பயணிகள்!!

1539

விபத்துக்குள்ளான பேரூந்து..

கண்டியில் இருந்து மன்னார் நோக்கு சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று செட்டிகுளம் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.



செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் இன்று (11.04) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் மழைக்கு மத்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பேரூந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

எனினும், குறித்த பேரூந்தில் 40 இற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த போதும் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.