வவுனியா மகிழங்குளம் மக்களுக்கு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதி!!

1548

அத்தியாவசியப் பொருட்கள்..

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஓமந்தை – மகிழங்குளம் கிராம மக்களுக்கு அத்தியாவசியக் பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

மலேசியாவில் உள்ள டெக் அவுட்ரீச் நிறுவனத்தின் அணுசரனையில் மலரும் பூமி பெண்கள் விவசாய அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் இவ் அத்தியாவயசிப் பொருட்கள் அடங்கி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக புத்தாண்டு தினத்திலும் பொருட்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்காக குறித்த அத்தியாவசிப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அரிசி, மா, சீனி, பருப்பு, உருளை கிழக்கு, வெங்காயம், நெத்தலி, முட்டை, தேங்காய் எண்ணெய், தேயிலை, உப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொதியே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.