ஓமந்தை பகுதியில்..

வவுனியா ஒமந்தை புகையிரத நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (18.04.2022) காலை 11.00 மணியளவில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளார்.

ஒமந்தை பகுதியில் புகையிரத தண்டவாளத்தினை அவர் கடக்க முற்பட்ட சமயத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டு உடலின் சில பாகங்கள் சிதறி சம்பவ இடத்திலியே அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புகையிரத்தில் எடுத்துச்செல்லப்பட்டு ஓமந்தை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து சம்பவம் தற்கொலையா? அல்லது விபத்தா? என கோணத்தில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





