வவுனியாவில் போராட்டக்காரர்களை கண்டு ஒழிந்த கலகத்தடுப்பு பொலிசார்?

1827

கலகத்தடுப்பு பொலிஸார்..

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் அலுவலகத்திற்குள் இன்று கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தும் அவர்கள் போராட்டக்காரர்களை கண்டு இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்குள் சென்று ஒழிந்து நின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கோரியும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களால் வவுனியாவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வவுனியா – கண்டிவீதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் அலுவலகம் நோக்கி ஆர்பாட்டக்காரர்கள் சென்றனர். இதனையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்கும் முகமாக கலகத்தடுப்பு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

எனினும் போராட்டக்காரர்கள் அலுவலகத்திற்கு முன்பாக வருகைதந்த போது கலகத்தடுப்பு பொலிஸார் வெளியில் வராமல் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்குள் சென்று ஒழிந்து நின்றனர். ஆர்ப்பாட்டங்கள் முடிவடைந்த பின்னரே பொலிஸார் வெளியில் வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.