சந்தானம் மீது மீண்டும் புகார்!!

255

Santhanam

நடிகர் சந்தானம் தனது வீட்டு மின்சாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி அதிகாரிகள் அவரது மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சந்தானம் வீட்டிற்குத் தரப்பட்ட மும்முனை மின்சார இணைப்பை சந்தானம் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சென்று சந்தானம் வீட்டு மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர். மேலும், முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியதற்கான அபராதம் செலுத்திய பிறகே மின் இணைப்பு திரும்பத் தரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.