இலங்கை – தமிழ்நாடு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் : பாஜக!!

282

BJPஇலங்கைக்கும் தமிழக மாநில அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையில் சமாதான முனைப்புக்களை முன்னெடுப்பதற்கு தமிழக மாநில அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது அவசியமானது என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசாங்கம் இலங்கையுடன் சிறந்த ராஜதந்திர உறவுகளைப் பேணத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து இலங்கையுடன் காத்திரமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.