வவுனியாவில் எரிபொருள் கோரி இ.போ.சபையினர் பணிப்புறக்கணிப்பு : மக்கள் சிரமம்!!

1051

இ.போ.சபையினர் பணிப்புறக்கணிப்பு..

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் இன்று (27.06.2022) அதிகாலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தாம் கடமைகளுக்கு செல்வதற்கு எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தே இ.போ.ச வவுனியா சாலையினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளமையுடன் இ.போ.ச பேரூந்துகளை சாலையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக பல பேரூந்து தரிப்பிடங்களில் பல மணிநேரமாக மக்கள் பேரூந்திற்காக காத்திருக்க வேண்டிய நிலமை காணப்படுவதுடன் தனியார் பேரூந்துகளில் அதிகளவிலான மக்கள் நெரிசலுடன் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணிக்கின்றமையினை அவதானிக்ககூடியதாகவிருந்தது.

டீசல் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்ட சேவையில் தனியார் பேரூந்துகள் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.