மாணவி எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!

1826

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம், ரயில் நிலைய பகுதியில் வசிக்கும் நடராஜன் – உமா தம்பதியின், மகள் நிஷாந்தி. இவர் கடந்தாண்டு 12ஆம் வகுப்பில், 529.5 மதிப்பெண் பெற்று, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வையும் எழுதியுள்ளார்.

கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்த அவர், இந்தாண்டு மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில், நிஷாந்தி இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நிஷாந்தியின் அறையில் கடிதம் ஒன்றை கைப்பற்றினர் அதில், பாடங்கள் தனக்கு கடினமாக இருந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், தனது தந்தை வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து இங்கேயே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.