ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கேரள காதல் தம்பதி… வைரலாகும் வீடியோ!!

2031

கேரளாவில்..

கேரளாவில் ஆலப்புழாவில் ஓடும் அரசு பேருந்து மக்கள் மத்தியில் மிக பிரபலமாக உள்ளது. இதற்கு காரணம் அந்த பேருந்தின் ஓட்டுனர், நடத்துனராக ஒரு தம்பதி பணியாற்றுவது தான்.



கிரி கோபிநாத் மற்றும் தாரா ஆகிய இருவரும் தான் ஓட்டுனர், நடத்துனராக பணியாற்றுகின்றனர். இந்த பேருந்தில், பயணிகள் பாதுகாப்பிற்காக 6 சி.சி.டி.வி. கேமிராக்கள், அவசரகால சுவிட்சுகள், இனிமையான பயணத்திற்கு பாடல்களை கேட்கும் வசதி, குழந்தைகளை கவர பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் ஆகியவை கொண்டுள்ளன.

பயணிகள் சென்று சேரும் இடம் பற்றிய விவரம் அறிவிக்கும் எல்.இ.டி. போர்டு வசதியும் பேருந்தில் உள்ளது. பேருந்து அழகாக தோற்றமளிக்க, இந்த தம்பதி தங்களது சொந்த நிதியையே செலவிட்டு உள்ளனர். இவர்களுக்கு ரசிக பெருமக்களும் உள்ளனர்.

இந்த பேருந்தில் வழக்கமாக பயணிப்பவர்கள் தங்களுக்குள் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கி உள்ளனர். இதுபற்றி தாரா புன்னகையுடன் கூறும்போது, ஒவ்வொரு நாளும் நாங்கள் அதிகாலை 1.15 மணிக்கு எழுந்திருக்கிறோம்.

2 மணிக்கு பேருந்து டெப்போவுக்கு செல்வோம். அதன்பின்னர், பேருந்தில் கிரி தூய்மை பணியை மேற்கொள்வார். பின்பு எங்களுடைய பணி காலை 5.50 மணிக்கு தொடங்கும் என கூறுகிறார்.

இவர்களது கதை இதனுடன் நின்று விடவில்லை. கடந்த 2020ல் திருமணம் செய்து கொண்ட இவர்களது காதல் 20 ஆண்டுகள் பழமையானது. கிரிக்கு 26 வயது இருக்கும்போது, தாராவுக்கு வயது 24. இருவரும் சந்தித்த பின்னர் காதல் வயப்பட்டு உள்ளனர்.

ஆனால் இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை. இதையடுத்து இருவரும் நீண்ட பொறுமை காத்து வந்து பின்னர் மணந்து கொண்டனர். தம்பதியின் காதல் கதை மற்றும் பேருந்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.