திருநம்பியுடன் ரகசிய காதல் வாழ்க்கை : நீதிமன்றம் கொடுத்த முக்கிய உத்தரவு!!

1345

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருநம்பியுடன் ரகசிய காதல் வாழ்க்கை நடத்திய பெண்ணை அவருடனே செல்ல நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் நடந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் திருநம்பி ஒருவரும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் நண்பர்களாகியுள்ளனர்.

இந்த நட்பு காதலாக மாறவே, கடந்த 7ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த அப்பெண்ணின் பெற்றோர், அவரை தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து திருநம்பி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், இருதரப்பினரும் சமரசத் தீர்வு மையம் மூலம் முடிவு எட்டுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

ஆனால், இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கிடையே நேற்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் முன்பு மனுதாரர், அந்தப்பெண், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

நீதிபதிகள் அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்த போது, காதலனுடன் செல்ல விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணுக்கு 21 வயது பூர்த்தியானதால், அவர் விரும்பியபடி மனுதாரருடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.