
பயணிகளுக்கு ஆபாச பாடல்களை ஒலிபரப்பிய தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இரத்தினபுரி நகர் மற்றும் நவநகர் பகுதிக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்ஸிலேயே இவ்வாறு ஆபாச பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பஸ்ஸில் பயணித்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் பென்ட்ரைவ் கருவியை மீட்டுள்ளனர்.
பின்னர் அதில் பதிவேற்றப்பட்டுள்ள பாடல்களை கேட்டபோது மிகவும் ஆபாச வார்த்தைகள் அடங்கியிருந்ததால் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சபை பொலிஸ் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ருவன் பண்டார குறிப்பிட்டார்.





