சிறுமியை கொடூரமாக தாக்கி மலத்தை வாயில் திணித்த சித்தி!!

2450
பரவூரில்..
சிறுமியை கொடூரமாக தாக்கி மலத்தை வாயில் திணித்த சித்தியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி அடுத்த பரவூரில் 6ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கி, மலம், சிறுநீரை வாயில் ஊற்றி கொடுமைப்படுத்திய சித்தி ரம்யாவை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிட்டாட்டுக்கரையை சேர்ந்த ரம்யா என்பவரை இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். ஆறாம் வகுப்பு மாணவியை மனதளவிலும், உடலளவிலும் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது, ரம்யா குழந்தையை மலம் கழிக்கச் செய்தும், தண்ணீர் என்று சொல்லி சிறுநீர் குடிக்க வைத்தும், அறையில் அடைத்து வைத்து இரும்பு கம்பியால் அடித்தும் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தினருக்கு முதலில் தகவல் கிடைத்தது. பின்னர் சைல்டு லைனை தொடர்பு கொண்டு வழக்கு பதிவு செய்தனர். சிறுமியின் சித்தி ரம்யா தற்போது காக்கநாடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.