காதல் திருமணம் செய்து செய்து கொண்ட தம்பதி ஒன்றாக எடுத்த விபரீத முடிவு!!

480

தமிழகத்தில்..

ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் தம்பதி. உயிரிழந்த இளம்பெண் கர்ப்பமாக இருந்தார் என கூறப்படுகிறது. தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருவள்ளூர் மாவட்டத்தின் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்தவர் சவுந்தரராஜன் (25). சில மாதங்களுக்கு முன்பு சவுந்தரராஜனும், பவித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று காலை வீட்டில் பவித்ராவும், சவுந்தரராஜனும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் தம்பதியின் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.