பொல்கஹாவல..
பொல்கஹாவல, உடபொல கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 8 வயதான சிறுவன், ஆற்றின் கரையோரத்தில் யானை ஒன்று நீராட்டப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது,
ஆற்றின் கரைக்கு சென்ற கிராம சேவகர் சிறுவனை தூக்கி ஆற்றில் வீசியுள்ளார். சிறுவன் ஆற்றில் வீசப்பட்டதால், சிறுவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய கிராம சேவகர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.