தண்ணீர் குடித்த சிறுமி பரிதாபமாக பலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

476

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது 6 வயது மகள் கடந்த வெள்ளிகிழமை காலை விளையாடி கொண்டிருந்த போது வீட்டில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தண்ணீர் என நினைத்து குடித்த சற்று நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.



இதனையடுத்து சிறுமியின் தந்தை மயங்கிய நிலையிலிருந்த சிறுமியைை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்து வந்தனர். இந்நிலையில் நான்கு நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.