பிரபுதேவாவின் சம்பளம் 30 கோடி : அதிர்ச்சியில் இந்திப் பட உலகம்!!

684

Prabhu Deva

பிரபுதேவா சம்பளம் 30 கோடியாக உயர்ந்துள்ளது. அடுத்து அவர் இயக்கப்போகும் இந்தி படத்துக்குதான் இவ்வளவு தொகை வாங்குகிறாராம். இதனால் இந்திபட உலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேறு எந்த இந்தி இயக்குனரும் இவ்வளவு தொகை சம்பளம் வாங்கியதில்லையாம்.

இந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டி வாங்கிய 20 கோடிதான் அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது. இப்போது அவரையும் பிரபுதேவா மிஞ்சி விட்டார். இவர் வாங்கும் சம்பளம் இந்தியில் முன்னணி கதாநாயகர்கள் சம்பளத்துக்கு இணையானது என்கின்றனர். தமிழ்ப்பட உலகின் முன்னணி கதாநாயகர்கள் இவ்வளவு தொகை சம்பளமாக வாங்கியது இல்லை.

பிரபுதேவாவை இந்தி திரை உகம் பெரிய இயக்குனராக கொண்டாடுகிறது. இவர் இந்தியில் சலன்மான்கானை வைத்து வாண்டட், அக்ஷய்குமாரை வைத்து ரவுடி ரத்தோர், கிருஷ்குமார், சுருதிஹாசன் ஜோடியாக்கி ராமையா வஸ்தாவையா, சாகித்கபூர், மோனாக்கி சின்ஹாவை ஜோடியாக்கி ஆர்.ராஜ்குமார், அஜய்தேவ்கானை வைத்து ஆக்ஷன் ஜாக்சன் படங்களை எடுத்துள்ளார்.

தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயகியுள்ளார்.