பாரதி முன்பள்ளி..
வவுனிய எல்லப்பர் மருதங்குளம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டு விழா முன்பள்ளி மைதானத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. முன்பள்ளி ஆசிரியை விஜயகுமார் பேபிசர்மிளா தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டு விழாவின் பிரதம விருந்தினராக முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் வி.பரஞ்சோதி அவர்களும் சிறப்பு விருந்தினராக கிராம சேவையாளர் எஸ்.ஜெயபிரகாஷ்,
அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.திவ்யா, சமூர்த்தி உத்தியோகத்தர் கே.திருநிறைச்செல்வி , ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷன் , நகரம்2 இணைப்பாளர் கே.செல்வராணி மற்றும்,
கௌரவ விருந்தினராக எஸ்.கணேசலிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தமையுடன் மேலும் முன்பள்ளி மாணவர்கள் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முன்பள்ளி மாணவர்களின் வரவேற்புடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஒழும்பிக் தீபம் ஏற்றுதலுடன் மாணவர்களின் நடனம் , விளையாட்டு போட்டிகள் , வினோத உடைப்போட்டி போன்ற பல செயற்பாடுகள் இடம்பெற்றன.