கவனயீர்ப்புப் போராட்டம்..
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (14.09.2022) முன்னெடுக்கப்பட்டது
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா குருமன்காடு காளி கோவில் ஆலய பின்புறமாக இடம் பெற்றது.
இதன் போது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் பதாதைகள் ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் ஏழுப்பியிருந்தனர்.