தகவல் அறியும் உரிமை தொடர்பில் வடக்கு மாகாண ஊடகவியலாளருடன் கலந்துரையாடிய தகவல் அறியும் ஆணைக்குழு!!

570

செயலமர்வு..

தகவல் அறியும் உரிமை தொடர்பில் வடமாகாண ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. ஊடக அமைச்சு மற்றும் தகவல் அறியும் ஆணைக்குழு என்பவற்றின் ஏற்பாட்டில் அப்ரியல் நிறுவனத்தின் அணுசரணையுடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த செயலமர்வு இன்று (29.09) காலை முதல் மதியம் வரை இடம்பெற்றது.

இதன்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள், அதனை மக்களுக்கு கொண்டு செல்லும் வழிமுறைகள் தொடர்பாக தகவல் அறியும் ஆணைக்குழு உறுப்பினர்கள் விளக்கமளித்திருந்ததுடன்,

வட மாகாண ஊடகவியலாளர்கள் தகவல் அன்றியும் உரிமைச் சட்டம மூலம் தகவல்களை கோரும் போது ஏற்படும் நடைமுறை பிரச்சனைகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தினர்.

இதன்போது ஆணைக்குழுவினர் அடுத்தகட்ட நடவடிக்கைகள், ஆணைக்குழுக்கான மேன்முறையீடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுருந்தனர். அத்துடன் கிராம மட்டத்தில் தகவல் உரிமைச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதியரசர் உபாலி அபயரட்ண, ஆணையாளர் பின்டு ஜெயரட்ண, ஆணையாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெகத் லியனராட்சி,

ஆணையாளர் முகமட் நகியா, பொது பணிப்பாளர் ருவன் சற்குமார, அப்ரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் ரவீந்திரடீ சில்வா மற்றும் அரச அதிகாரிகள், வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள், வடக்கு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.