கனடாவில் சகோதரியுடன் சேர்ந்து பிறந்தநாளில் உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்!!

876

கனடாவில்..

கனடாவில் இலங்கை தமிழர்களான இரண்டு உடன்பிறப்புகள் உயிரிழந்த சம்பவத்தில் தங்களுக்கு நீதி வேண்டும் என குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரொறன்ரோவோவின் Markham நகரில் கடந்த புதன்கிழமை ட்ரக் வண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதி நடந்த விபத்தில் பதீரனா புவேந்திரன் (21) என்பவரும் சகோதரி நெலுக்சனா புவேந்திரன் (23) என்பவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர்களின் தாய் ஸ்ரீரதி சண்முகநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ஸ்ரீரதியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பதீரனா மாமா சுவின் பூபாலசிங்கம் கூறுகையில், எங்கள் குடும்பத்திற்கு தெரியும் இது எதையும் மாற்றப்போவதில்லை என்று. ஆனால், வேறு எந்த குழந்தைகளுக்கும் இது நடக்காமல் இருக்க, எங்களுக்கு நீதி வேண்டும்.

ஸ்ரீரதிக்கு நினைவு திரும்பியவுடன் தன் பிள்ளைகள் எங்கே என்று தான் எங்களிடம் கேட்பார், நான் அவளிடம், ‘இதுதான் நடந்தது’ என்று சொல்ல வேண்டும், அவர் இறுதிச் சடங்கிற்கு வர முடியுமா என்று இனி தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஸ்ரீரதி எழுந்திருப்பதற்காக நான் காத்திருக்கிறேன் என கூறினார்.

பதீரனா தனது பிறந்தநாளில் உயிரிழந்தது தான் பெருஞ்சேகம். பதீரனா மற்றும் நெலுக்சனா ஆகியோரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை பூபாலசிங்கம் செய்து வருகிறார்.

46 வயதான டிரக் ஓட்டுனருக்கு எந்தவொரு காயமும் ஏற்படாத நிலையில் சம்பவ இடத்திலேயே இருந்திருக்கிறார்.சனிக்கிழமை வரையில் சம்பவம் தொடர்பில் எந்தவொரு வழக்கும் அவர் மீது பதியப்படவில்லை.