13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 38 வயது நபர் கைது!!

598

Abuse13 வயது சிறுமியை காதல் வயப்படுத்தி அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் – மன்னார் வீதி வீலுக்க பகுதியைச் சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டவர் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்கென புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.