வவுனியாவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு மட்டத்தினை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!!

467

கலந்துரையாடல்..

உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு மட்டத்தினை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் வவுனியா பிரதேச செயலக கேட்பார் கூடத்தில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச வாழ் மக்களின் உணவுப் பாதுகாப்பு, வறிய குடும்பங்களின் பிள்ளைகளிற்கான போசனைமட்டத்தினை உயர்த்துவதற்கான சாத்தியமான திட்டங்கள், அதற்கான நிதிக்கிடைப்பனவுகள்,

வறிய குடும்பங்களிற்கான நிலைத்திருக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடலில் ஆராய்ந்திருந்தனர்.

இக்கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.