வவுனியா மாவட்டத்தில் 68 மாணவர்கள் 9A சித்திகள் : மாகாண மட்டத்தில் இரண்டாமிடம்!!

1050

68 மாணவர்கள் 9A சித்திகள்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 68 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

வவுனியா வடக்கு வலயத்தில் 12 மாணவர்களும் வவுனியா தெற்கு வலயத்தில் 56 மாணவர்களும் 9ஏ சித்திகளை பெற்று மாகாண மட்டத்தில் வவுனியா மாவட்டம் இரண்டாம் நிலையை பெற்றுள்ளது.

வட மாகாணம் முழுவதாக 551 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.