வவுனியாவில் பிரத்தியோக வகுப்பிற்கு செல்லாத மாணவனை தும்புத்தடியால் தாக்கிய ஆசிரியை!!

1382

மாணவனை தாக்கிய ஆசிரியை…

வவுனியா நகரை அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள பிரபல அரச பாடசாலையில் பிரத்தியோக வகுப்பிற்கு செல்லாத மாணவனை தும்புத்தடியால் ஆசிரியை தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தரம் 5இல் குறித்த மாணவன் கல்வி பயின்று வருவதுடன் எதிர்வரும் புலமைப்பரிசையிலும் தோற்றவுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனை தனது பிரத்தியோக வகுப்பிற்கு வருமாறு ஆசிரியை ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மாணவன் அவரின் பிரத்தியோக வகுப்பிற்கு செல்லவில்லை இதனால் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மாணவன் மீது தும்புத்தடியால் ஆசிரியை தாக்கியுள்ளதாகவும் இதன் காரணமாக மாணவனின் உடல்களில் தழும்புகள் உள்ளதாகவும்,

மாணவனின் எதிர்கால கல்வி பாதிப்புக்குள்ளாகும் என்பதினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளவில்லை என மாணவனின் பெற்றோர் மேலும் தெரிவித்தனர்.

எதிர்வரும் சில வாரங்களில் புலமைப்பரீட்சையில் மாணவன் தோற்றவுள்ள நிலையில் மாணவன் உளவியல் ரீதியாக பாதிக்கபடும் சம்பவமாக இச் சம்பவம் பதிவாகியுள்ளது.