வவுனியா காணி விசேட மத்தியஸ்த சபையின் அமர்வுகள் நிறுத்தம் : தவிசாளர் ஆர்.நவரட்ணம்!!

542

விசேட மத்தியஸ்த சபை

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெறவிருந்த காணி விசேட மத்தியஸ்த சபையின் இரு அமர்வுகள் இடைநிறுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட விசேட மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஆர்.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.



எதிர்வரும் 18.12.2022 மற்றும் 25.12.2022 ஆகிய திகதிகளில் இடம்பெறவிருந்த காணி விசேட மத்தியஸ்த சபையின் அமர்வுகள் இடம்பெறாது எனவும் அதன் பின்னரான அமர்வு 01.01.2023 அன்று வழமை போன்று இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.