விபத்தில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.. கதறி அழும் மனைவி!!

466

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹிரேகரூர் தாலுகா கொடடா என்ற இடத்தில் தேனிலவு முடிந்து வீடு திரும்பிய புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



தாவணகெரே மாவட்டம் ஜிக்லியை சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கும் பிரீத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் 28ம் தேதி திருமணம் நடந்தது. தேனிலவுக்கு பல்வேறு இடங்களுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை, ஷிராசி மாரிகாம்பா தேவி கோவிலில் தரிசித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்களது பைக் டிராக்டர் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் சஞ்சய் உயிர் இழந்தார். கணவரின் மரணம் குறித்து அறிந்த பிரீத்தி கதறி அழுதார். இந்த கோர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.