வவுனியா மாவட்டத்தில் 34 பரீட்சை நிலையங்களில் 2933 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்!!

872

புலமைப்பரிசில் பரீட்சை..

நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (18.12.2022) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திலும் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.



நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இரண்டாயிரத்து 894 மத்திய நிலையங்களில் மூன்று இலட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 34 பரீட்சை மத்திய நிலையங்களில் 2933 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றதுடன் 14 பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்ததுடன் அமைதியான முறையில் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன.