வவுனியாவில் இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!! 

619

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டம்..

வவுனியா பல்கலைக்கழகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் இணைந்து வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவ பயிற்சியொன்றை வழங்கி எதிர்கால் சமுகமட்டத்தில் அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடிய தலைவர்களை உருவாக்கும் நோக்கோடு,



இத்திட்டத்திற்கான ஒப்பந்தமொன்றில் இன்று( 19.12.2022) கைச்சாத்திடப்பட்டது. வவுனியா பல்கலைக்கழகத்தில் வியாபார கற்கைகள் பீட பீடாதிபதி கலாநிதி வை.நந்தகோபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,

வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரி.மங்களேஸ்வரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் திட்ட முகாமையாளர் ஜே.யூட் வோல்டன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுக்கொண்டனர்.