கனேடிய பெண்ணை பாரம்பரிய முறையில் மணந்த இந்திய இளைஞர் : சுவாரஸ்ய காதல் கதை!!

366

தெலங்கானாவில்..

இந்திய இளைஞருக்கும், கனேடிய பெண்ணிற்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமானது இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. தெலங்கானாவின் வாரங்கலை சேர்ந்த சகீத்.



இவர் கனடாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அந்நாட்டை சேர்ந்த டிராசி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பானது ஒருகட்டத்தில் காதலாக மாறியது.

இதையடுத்து சகீத் – டிராசி ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இது குறித்து இரு குடும்பத்தாரிடமும் சொல்லி சம்மதமும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து தெலங்கானாவில் சகீத் – டிராசி திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திருமணத்தில் இரு குடும்பத்தாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.