வவுனியாவில் விபரீத முடிவெடுத்த 17 வயதுச் சிறுமி!!

1833

ஓமந்தையில்..

வவுனியா, ஓமந்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று (20.12.2022) மீட்கப்பட்டுள்ளது என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

த.மதுசாலினி என்ற 17 வயதுச் என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமி இரவு வீட்டாருடன் படுக்கைக்குச் சென்றுள்ளார். இந்தநிலையில் அதிகாலை அருகிலிருந்த அறையில்,

தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாகக் காணப்பட்டார் என்று பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.