வவுனியாவில் நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தில் குளவிகள் அட்டகாசம் : 30 பேர் வைத்தியசாலையில்!!

306

Namal

வவுனியா கலாபோகஸ்வௌ கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்த கூட்டமொன்றில் குளவிகள் கொட்டியில் 30 போர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டம் இடம்பெற்றபோது மக்களால் கொழுத்தப்பட்ட பட்டாசின் சத்தத்திற்கே குளவிகள் கலைந்து மக்கள் மீது கொட்டியதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக குளவி கொட்டியதை அடுத்து நாமல் ராஜபக்ஷவை அவரது மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாத்துள்ளனர்.

இந் நிலையில் மெய்பாதுகாவலர்கள் உட்பட பொலிஸார் இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் மீதும் குளவி கொட்டியுள்ளது.

இந்நிலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 30 பேருக்கும் உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு தற்போது அவர்கள் பாதிப்பின்றி உள்ளதாக தெரிவத்த வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் குளவி கொட்டுக்கு குழந்தைகளும் உள்ளடங்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.