கிளிநொச்சியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற உப அதிபர் கைது!!

401

Abuse

13 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து 51 வயதான பாடசாலை உப அதிபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி நகரில் தனியார் பகுதி நேர வகுப்புக்கு சென்றிருந்த மாணவியை, அங்கு கற்பித்து வந்த உப அதிபர் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

ரம்பேவ, மாஹகன தராவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட இந்த நபர் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.