வீதி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக பலி!!

756

புஸ்ஸலாவவில்..

கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் புஸ்ஸலாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (18.04.2023) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



விபத்திற்குள்ளான நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த வாகனமொன்று இவரை மோதிவிட்டு, தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதிக இரத்தபோக்கு ஏற்பட்டதால் குறித்த மூதாட்டி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கம்பளை பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.