கண்டி – பல்லேகல காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியை வெட்டிப் படுகொ லை செய்துவிட்டு காதலன் தப்பியோடியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் பல்லேகல காவல்துறை பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பல்லேகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.