மலேசியாவில் கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் 38 பேரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மலேசியாவில் கெலான்டன் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது தோழியை பார்க்க சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சிறுமியை கடத்தி சென்றது. பின்னர் அங்கு கேட்பாரற்று கிடந்த குடிசைக்குள் வைத்து அவரை பலாத்காரம் செய்தது.
இதுகுறித்து பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பெண்ணை 38 பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்தது.
அதை தொடர்ந்த 12 பேரை பொலிசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணின் தோழியும் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். எனவே அவரிடமும் விசாரணை நடக்கிறது.