பதுளையில் 12 வயது மாணவிக்கு நேர்ந்த கதி… ஆசிரியர் கைது!!

801

பதுளையில்..

பதுளை – ஹல்துமுல்ல பகுதியில் 12 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (06.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 55 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட மாணவி பாடசாலையின் கழிவறையில் வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.