சிறுவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சிறப்புத் திட்டம்

536

சிறுவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும்….

நாட்டின் சிறுவர்களுக்கான போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (07.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பிஸ்கெட் வகையொன்றை வழங்கவுள்ளோம்.

அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம்.

மேலும், குழந்தைகளுக்கு முட்டை போன்ற சத்துள்ள உணவை வழங்குவதற்குத் தேவையான உணவுப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.