வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குள நீரேந்து பிரதேச ஆக்கிரமிப்புக்கு நடவடிக்கை!!

1523

வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளம் பகுதியின் நீரேந்து பிரதேசம் ஒரு சிலரால் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்துததுடன் இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று முறைப்பாட்டையும் பெற்றிருந்தனர்.

இது தொடர்பாக இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த ஆக்கிரமிப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியருந்தார்.

இதற்கு பதில் கூறிய மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றிற்கு முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.