கணவனை பிரிந்த பெண்ணை கொன்று வீசிய காதலன்!!

617

ஆந்திராவில்..

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜகதம்பா என்ற பகுதியில் ஷிராவாணி என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். இளம்தம்பதியான இவர்கள் இருவரும் இல்லற வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி குடும்பத்தில் நெடுகாலம் நீடிக்கவில்லை.

திருமணம் முடிந்த சில மாதங்களில் ஷிராவாணிக்கு வேறு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் தம்பதி இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழத் தொடங்கினர்.

இதனையடுத்து தனியாக வசித்த சிலாவணி, அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்தார். அங்கு கோபாலகிருஷ்ணா என்ற இளைஞருடன் ஷிராவாணிக்கு நட்பு ஏற்பட்டது.

இந்த நட்பு காதலமாக மாறியதால் இருவரும் நெருக்கமாக பழகினர். ஒரு கட்டத்தில், இருவரும் தனியாக ஒரு வீட்டில் ஒன்றாக கணவன் மனைவியாகவே வாழ்ந்தார்கள். சில மாதங்களில் ஷிராவாணியின் செயல்பாடுகளில் கோபாலகிருஷ்ணனுக்கு சந்தேகம் எழுந்தது.

மற்ற ஆண்களுடன் நெருக்கமாக பழகி வந்ததால் ஷிராவாணியை அவர் கண்டித்தார். இதன் அடிப்படையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எனினும், ஷிராவாணி எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். செல்போனில் பல ஆண்களுடன் எடுத்த புகைப்படங்கள் இருந்தது.

இதனால் பொறுக்க முடியாமல் கோபால கிருஷ்ணன் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் ஷிராவாணி தன் காதலர்களிடம் பேசுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் வெளியேற முடிவுசெய்தார்.

இருப்பினும் கடைசியாக பேசிப்பார்க்க இருவரும் விசாகப்பட்டினம் கடற்கரை சாலைக்கு சென்றனர். அதிகாலை 2 மணிக்கு கோகுல் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணனா, ஷிராவாணியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து கோபாலகிருஷ்ணா நேராக போலீசில் சென்று சரண் அடைந்தார். அதன்பிறகே இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.