வவுனியாவிலிருந்து புதூர் நோக்கி விசேட பேரூந்து சேவை!!

1961

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விசேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தனியார் மற்றும் அரச பேரூந்தின் ஒத்துழைப்போடு இச் சேவை நடைபெறுகின்றது. இன்று (19.06.2023) காலை முதல் நாளை 20.06.2023 காலை வரை இந்த விசேட பேரூந்து சேவை நடைபெறவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளிலிருப்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ் வருடாந்த பொங்கல் விழாவினைக் காண புதூர் நோக்கி சென்று வருடாந்தம் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.