புகையிரத நிலையத்தில் துடிதுடித்து பலியான பெண்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1026

டெல்லியில்..

டெல்லியில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்துகொண்டிருந்தது. இந்த நிலையில், கிழக்கு டெல்லியின் ப்ரீத் விஹாரைச் சேர்ந்த சாக்ஷி அஹுஜா (Sakshi Ahuja) உள்ளிட்ட 3 பெண்கள், மூன்று குழந்தைகளுடன் இன்று அதிகாலை 5:30 மணியளவில் ரயில் நிலையத்தை அடைந்தார்.

வெளியேறும் கேட் எண் ஒன்றுக்கு (Exit No-1) அருகில் வந்துகொண்டிருந்த அந்தப் பகுதியில் மழையால் தேங்கி நின்ற தண்ணீரை கடக்க, அவர் மின்கம்பத்தைப் பிடித்தபோது அவர்மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

உடனே, அருகில் இருந்த அவரின் சகோதரி மத்வி சோப்ரா மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து சாக்ஷி அஹுஜாவின் சகோதரி மாத்வி சோப்ரா, இந்த விபத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் எனப் புகார் அளித்தார், அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவம் குறித்து ரயில்வே மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.