வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜிப் பெருநாள் திடல் தொழுகை பட்டாணிச்சூர் 5ம் ஒழுங்கை குடா வயல் திடலில் இன்று (29.06) காலை இடம்பெற்றது.
முஸ்லிம்களின் தியாகத் திருநாளான புனித ஹஜ்ஜிப் பெருநாள் நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் வவுனியாவிலும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் விசேட தொழுகைகளுடன் கொண்டாட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜிப் பெருநாள் திடல் தொழுகை ஜமாத்தின் தலைவர் அஷ்ஷேய்க் ஸாதிகீன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டதுடன் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.