கார் மோதியதால் 5 சிறுவர்களுக்கு நேர்ந்த நிலை!!

889

கலவானவில்..

கலவான – இரத்தினபுரி வீதியில் கஹரங்கல பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற வாகன விபத்தில் 5 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த சிறுவர்கள் கலவான ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.


கலவான, ஹகரங்கல பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த 5 சிறுவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.இரத்தினபுரியிலிருந்து வந்த கார் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.



காயமடைந்த சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என கலவானை ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கலவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவில் கலவானை பொலிஸ் காரின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.