வவுனியாவில் பிளாஸ்டிக்கால் விலங்குகளுக்கு பாதிப்பு என தெரிவித்து விழிப்புணர்வு ஊர்வலம்!!

641

பிளாஸ்டிக் பாவனையால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இதனை கட்டுப்படுத்தக்கோரி விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நேற்று (09.07) காலை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

இந்து பெளத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலமானது வவுனியா பூங்கா வீதியில் உள்ள பல்கலைக்கழக வெளிவாரிகள் பிரிவுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து நகர்வழியாக ஆரம்ப இடத்தை சென்றடைந்தது.



இதன்போது வீதியோரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களால் அகற்றப்பட்டிருந்தது. இதில் இந்து பெளத்த சங்கத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.