யாழ் வடமராட்சியில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்!!

912

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் மாவட்டம் – வடமராட்சி பிரதேசத்தில் முச்சக்கர வண்டியும் பட்டா வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (25-07-2023) மந்திகை, மடத்தடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.



எதிர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருந்த இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி தலைகீழாக புரண்டு சேதமடைந்துள்ளது.விபத்து தொடர்பில் பருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளார்.