கொள்கலன் ஒன்றுடன் மோதிய தொடருந்து : முற்றாக ஸ்தம்பித்த போக்குவரத்து!!

1044

வில்வத்தயில்..

வில்வத்த ரயில் கடவையில் கொள்கலன் ஒன்று தொடருந்துடன் இன்று காலை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக கிரிஉல்ல – மீரிகம வீதி போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அலுவலக தொடருந்துடன் இந்த கொள்கலன் மோதியுள்ளது.



தொடருந்தில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் தொடருந்து சமிஞ்சை, மின்கம்பங்கள், தொடருந்து கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதென என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தால், தொடருந்தின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் பல தொடருந்துகள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.